Thursday, June 23, 2011

அழிவை நோக்கிய பாதையில் தமிழ்மொழி பயணிக்கிறது!




எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத்தமிழ் என்று சங்கே முழங்கு என்று ஈராயிரம் ஆண்டுக்கு மேலாக வீர முழக்கம் இட்ட ஒரு இனம் தனது தொன்மை வாய்ந்த இலக்கண இலக்கிய மரபுகளை தன்னகத்தே கொண்டுள்ள கலப்புக்கள் அற்ற தூய மொழியாக பல்லாயிரம் கல்வெட்டுக்களை வரலாற்று சான்றுகளாக பறைசாற்றி மங்காத புகழோடு வானுயர்ந்து வளர்ந்து சிறந்து விளங்குகின்ற தனது தாய்மொழியாகிய தமிழ் மொழியை இழக்கப்போகிறதே என்பதுதான் தமிழ் ஆர்வலர்களின் இன்றைய கவலை.





Monday, June 20, 2011

மனித குலத்தையே தலைகுனிய வைத்த பொஸ்னிய படுகொலைகள்

ஐரோப்பாவில் 1918 ஆம் ஆண்டு முதலாம் உலகயுத்தத்தின் பின் யுகோஸ்லாவியா என்ற ஒரு கூட்டு ஆட்சி அமைக்கப்பட்டது. அதில் பொஸ்னியா, மொன்ரிநிக்ரோ, ஸ்லோவேனியா, க்ரோஷியா, மாசிடோனியா ஆகிய நாடுகள் அங்கம் வகித்தன.
1946 ஆம் ஆண்டு யுகோஸ்லாவியா ஆனது கம்யூனிச வழிகாட்டலில் தனக்கான அரசியல் கட்டமைப்பை நிறுவியது. மக்களுடைய ஆதரவையும் வொன்றெடுத்தது. அதன் பிற்பாடு வந்த ஆட்சியாளர்களின் செயற்பாடுகளால் யுகோஸ்லாவியா பல கூறுகளாகச்சிதறியது.





Sunday, June 19, 2011

லெபனான் விடுதலையின் விடிவெள்ளி : ஹிஸ்புல்லா


காலணி ஆதிக்க காலங்களில் பிரான்சிடம் அடிமைப்பட்டிருந்த லெபனான் விடுதலையடையும் பொழுது அதன் ஆட்சி அதிகாரங்கள் யாவும் கிறிஸ்தவர்கள் கையில் ஒப்படைக்கப்பட்டது. காலணியாதிக்க காலங்களில் மதமாற்ற வலியுறுத்தல்கள் லெபனானிய மக்களை நாற்பது விழுக்காடுகளுக்குமேல் கிறிஸ்தவர்களாக மாற்றியது. பூர்வீக குடிகளான இசுலாமிய மக்களிடையே ஷியா, சுனி முஸ்லீம் என இரு பிரிவினைகள் காணப்பட்டன. லெபனான் விடுதலையடைந்த பிற்பாடு, இஸ்ரவேலினுடைய நிலவிரிவாக்க ஆசையினால் தெற்கு லெபனான் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டன. அக்காலத்தில் லெபனான் ஆட்சியாளர்களுடைய பிற்போக்கான செயற்பாடுகளால் மக்களுடைய ஆதரவை அரசு இழந்தது. மாறாக கிளர்ச்சிகளும் போராட்டங்களும் வெடிக்க ஆரம்பித்து ஈற்றில் இவை ஆயுதப்போராட்டத்திற்கு வழிகோலியது. நிலமைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது இராணுவத்தை அனுப்பி கடைசியில் தனது தலையில் தானே மண்ணை வாரிக்கொட்டியது.





கடவுள் மனிதனைப்படைத்தானா? மனிதன் கடவுளைப்படைத்தானா? [Tags: Who created god; Atheist]


நேற்று முழைத்த காளான் நாத்தீகம் என்று முழங்குகிறது என்று நகைக்காதீர்கள் நண்பர்களே உங்கள் கடவுள் என்ற கருத்து உருவான காலந்தொட்டே அதை நிறுத்து என்ற குரல் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. முற்காலத்தில் மன்னர்கள் மதகுருமார் பிடியில் அகப்பட்டதனால் அறிவுக்கருத்துக்களை வெளியிட்டு மனித சிந்தனைக்கு களம் திறந்த அறிஞர்களை அழித்தார்கள். ஆனால் உண்மைகள் நீண்டநாள் உறங்காது என்பதை பகுத்தறிவின் வளர்ச்சியும் பார்ப்பானின் வீழ்ச்சியும் பறைசாற்றுகின்றன.





இன்பத்திருநாள் எந்நாளோ?



சிட்டுப்போல் சிறகடித்து
சிறார்போல் ஒற்றுமையாயிருந்து
பட்டுப்போல் அலங்கரித்து _ பல
பண்பாளரை வளர்த்தெடுத்து
வட்டுநகர் சிறப்புற்று _ எம்
வடுக்களெல்லாம் படுத்துறங்க
மெட்டிசைத்துப் பாடும் நாள்
எந்நாளோ?





Wednesday, June 1, 2011

இதுவரை வெளியான பதிவுகள் [total post released by alivetamil blog alive tamil website]

இதுவரை வெளியான பதிவுகள்





Welcome to Alivetamil Blog www.alivetamil.blogspot.com


சாதி மத சகிதியில் இருந்து தமிழனை மனிதனாக வாழவைத்த தந்தை பெரியாரின் பேரனாய், தமிழ் உணர்வோடும் தன்மானத்தோடும் தலை நிமிர்ந்த பண்டாரவன்னியன் வழி வந்த வீரனாய் வாழும் என் தமிழ் உறவுகளுக்கு உற்சாகமாய் தோள் கொடுத்து பகுத்தறிவையும் இன உணர்வையும் ஊட்டும் கலிங்கம் போன்றது இத்தளம். பட்டையைப் பூசி கொட்டையைக் கட்டிப் பகல் வேடம் போட்டுப் பாமரரை ஏமாற்றும் பகற் கொள்ளைக்காரப் பார்ப்பானிற்கு இத்தளம் பாஷணம் போன்றது. யாரையும் புண்படுத்தும் நோக்கம் அடியேனுக்கு கிடையாது சமூகப்புரட்சிகளையும் பகுத்தறிவுப் போதனைகளையும் இளையோர் கற்றுக் காமுற வேண்டும் என்பது அவா.

மததால் சாதியால் இடத்தால் (பிரதேச வாதத்தால்) நாம் பிளவுபட்டு இழந்ததெல்லாம் போதும்.. தமிழன் என்ற ஓர் அணியில் இணைவோம்..எம் முன்னால் உள்ள‌ தடைக்கற்களெல்லாம் படிக்கற்களாகட்டும்.. தரணியை தமிழினம் ஆளட்டும்..

உலகத்தமிழர்களெ ஒன்றுபடுங்கள்!

தோழர்களே வாருங்கள் ஒன்றாக வடம் பிடிப்போம்

வரலாற்றிலே இடம் பிடிப்போம்.


தமிழ்பிரியன்

சாவில் தமிழ் படித்து சாகவேண்டும் என்

சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்

alivetamil@gmail.com

Related Posts Plugin for WordPress, Blogger...

கட்டுரைகள்

Rationality Tamil Society & Politics
கடவுள் மனிதனைப்படைத்தானா? மனிதன் கடவுளைப்படைத்தானா? Who created the God By Alive tamil அழிவை நோக்கிய பாதையில் தமிழ்மொழி பயணிக்கிறது!Tamil is disappearing By Alive tamil மார்க்சியமும் அதன் மெய்யியல் கோட்பாடுகளும் Marxism By Alive tamil
பகுத்தறிவு என்றால் என்ன? What is Rationality By Alive tamil மறைக்கப்பட்ட எல்லாளனின் சமாதி The hidden tomb of Ellalan By Alive tamil பிரடெரிக் எங்கல்ஸின் பார்வையில் பாட்டாளி வர்க்கம் proletariat By Alive tamil
தீ மிதித்தல் அலகு குற்றுதல் அருளா அல்லது அறிவியலா? By Alive tamil மனித வாழ்வியலில் திருக்குறளின் அவசியம் Importance of Thirukural By Alive tamil மாவோவின் வரலாற்று பயணம் History of Mao zedung By Alive tamil
உலகில் முன் தோன்றிய பகுத்தறிவாளன் வள்ளுவன் Valluvar By Alive tamil உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன் Senbaharaman By Alive tamil வேண்டும் விடுதலை காஷ்மீர் மக்கள் Freedom of Kashmir By Alive tamil

 
  •  

    RSS Feed

    facebook

    Twitter

    Youtube

    Indli

    Tamilmanam