Thursday, September 29, 2011

மரங்களை வளர்ப்போம்: சர்வதேச வன வள பாதுகாப்பு தினம்


மரங்களை வளர்ப்போம்: சர்வதேச வன வள பாதுகாப்பு தினம் Sep 13

ஒரு சின்னஞ் சிறிய செடி
மலரேந்தி மற்றவர்களுக்கு
மகிழ்ச்சி தராமல் இருக்கவே முடியவில்லை
ஒரு பென்னம் பெரிய மரம்
மற்றவர்களுக்கு நிழல்தராமல்
அந்த மரத்தால் வளரவே முடியவில்லை!




Sunday, August 28, 2011

உலகத்தமிழர்களே ஒன்றுபடும் நேரம் இது


தமிழர்கள் மூவரின் தூக்கு தண்டனையை நிறுத்தகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பது நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்நிலையில் வழக்கு தாக்கல் செய்யும் பொழுது அம்மூவரின் காக்க கோரி மக்களின் குரல்களையும் கோரிக்கைகளையும் பதிவு செய்ய வழக்கறிஞர்கள் குழு திட்டமிட்டிருக்கிறது. அதன் பொருட்டு மனிதநேயமிக்க மக்களாகிய உங்களிடம் உங்கள் கோரிக்கைகளையும் கடிதங்களையும் நாடி வந்திருக்கிறோம். தயவு கூர்ந்து வழக்கு தாக்கல் செய்யும் திங்கள் கிழமைக்குள் தமிழர்கள் மூவரின் தூக்கு தண்டனையை நிறுத்த கோரும் உங்கள் கடிதங்களை கீழுள்ள மின்னஞ்சல்(email) முகவரிக்கு அனுப்புங்கள்.
மானிடத்தை கொல்லும் மரணதண்டணையை ஒழிப்போம் தமிழர்களே ஒன்றுபடுங்கள்..





Friday, August 26, 2011

தமிழா! நீ பேசுவது தமிழா? [AliveTamil Blog]



தமிழா! நீ பேசுவது தமிழா?


அன்னையைத் தமிழ்வாயால் மம்மி என்றழைத்தாய்…
அழகுக் குழந்தையை பேபி என்றழைத்தாய்…
என்னடா தந்தையை டாடி என்றழைத்தாய்…
இன்னுயிர்த் தமிழை கொன்று தொலைத்தாய்….




Thursday, August 25, 2011

English என்பது தமிழின் மூலச்சொல்லா?(Video Updated) [Alive Tamil Blog]


ஆங்கிலம் தலைவிரித்தாடும் இந்த காலகட்டத்தில் ஆங்கிலத்தில் உள்ள எழுபத்து ஐந்து விழுக்காட்டிற்கும் அதிகமான சொற்கள் தமிழ்மொழியின் மூலத்திலிருந்து உருவானவை என்று சொல்லியல் ஆராட்சியாளர்கள் கருதுகின்றார்கள். ஆங்கிலத்தின் மூலமொழி யாது? என்கின்ற வினாவை ஆராய்கிறது இக்காணொளி.




Saturday, August 20, 2011

சும்மா கிடையாது தம்பி [Poem Alive Tamil Blog]


சும்மா இருந்து மந்திரம் போடாதே சுறுசுறுப்பாய் எழு தமிழா
இது அம்மா கொடுக்க சுண்டல் இல்லை சுதந்திரமடா தோழா
அடுத்தவன் உனக்காய் உயிரை கொடுத்து உழைத்திடுவானோ தமிழா
கெடுத்தவன் வாழ்வை அழித்து விடாது படுத்து உறங்காதே தோழா




Tuesday, August 16, 2011

வட மொழி செய்த வினைகள்[North Language Alivetamil Blog]

  
 வந்தாரை வாழவைக்கும் தமிழகமல்லவா? தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே வட மொழியாளர்கள் இங்கு புகுந்துவிட்டனர். தமிழ்நாட்டில் தாராளமாகத் தம்மொழிச் சொற்களைப் பரப்பினர். எளிய, இனிய தமிழ்ச் சொல் பேசும் தமிழர், கடினமான உச்சரிக்க முடியாத வடமொழிச் சொற்களையும் கூறி மகிழ்ந்தனர். "மனம்" என்பது தமிழ்ச்சொல்; வடமொழியில் "ஹ்ருதய" எனக்கூறப்படும். வடமொழியை உச்சரிப்பது மிகக் கடினமானதாகும். அதற்கு முயற்சி அதிகம் தேவை. வாய், உதட்டளவில் தமிழை உச்சரிக்கும் நாம் வடசொல்லை உச்சரித்தால் அடிவயிற்றிலிருந்து முயலல் வேண்டும்.




Saturday, August 13, 2011

கொலைக்கு கொலையா தண்டணை என்ன மனிதநேயம்! [Alive Tamil Blog]


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் அண்மையில் நிராகரித்துள்ள நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அறிவு என்கிற பேரறிவாளன், சிறீஹரன் என்கிற முருகன், சாந்தன் ஆகிய மூன்று பேரினுடைய தூக்குத்தண்டணையும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மூவருக்கும் இந்திய உச்ச நீதிமன்றம் 1999 ஆம் ஆண்டில் மரண தண்டனையை உறுதி செய்தது. அதன் பிறகு 2000 ஆம் ஆண்டில் இவர்கள் மூவரும் குடியரசுத் தலைவருக்கு தங்கள் மீது கருணை காட்டி, மரண தண்டனையை குறைக்குமாறு கேட்டு கருணை மனுக்களை அனுப்பி வைத்தனர். இந்தக் கருணை மனுக்களின் மீது 11 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்படி முடிவெடுத்துள்ள குடியரசுத் தலைவர், கருணை மனுக்களை நிராகரித்துள்ளார்.




உயிர்ப்பிச்சை அல்ல, மறுக்கப்பட்ட நீதி [Perarivalan Alive Tamil Blog]


சத்தியமே வெல்லவேண்டும் என்பதையும் தாண்டி சக மனிதன் சாகக்கூடாது என்ற மாந்த நேயம் உள்ளவர்களின் மனசாட்சியை திறப்பதற்காக பேரறிவாளன் எழுதிய கடிதத்தை இங்கே பிரசுரிக்கிறேன், பிச்சை எடுத்தாவது அவனை காப்பாற்றுவதற்காக, ஆனால் அவனோ கேட்பது உயிர்ப்பிச்சை அல்ல, மறுக்கப்பட்ட நீதி.




Friday, August 12, 2011

நெஞ்சை நெகிழ்த்தும் புகைப்படங்கள் [Photo Alive Tamil Blog]

உகண்டா வறுமையை வெளிக்கொணரும் புகைப்படம் (1980); மைக் வால்ஸ் என்பவருக்கு இப்புகைப் படத்தை எடுத்ததற்காக விருது வழங்கப்பட்டது. எனினும் அவர் இவ்விருதை வாங்க மறுத்துவிட்டார் ஏனெனில் இப்புகைப்படத்தில் இருப்பவர் இந்நேரம் உயிரோடு இருப்பாரோ இல்லையோ என்ற ஐயம் அவர் மனதை உறுத்தியதால்.
*****************************  




பின்லேடனின் கடைசி நிமிடங்கள்..[Bin Laden Alive Tamil Blog]

    பின்லேடன் ஏற்கனவே இயற்கை மரணம் எய்திவிட்டார் என்றும் ஒபாமாவின் செல்வாக்கு அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியை போல் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது, இதனை சரிசெய்யவே பின்லேடன் கொல்லப்பட்டதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் என ஈரான் அண்மையில் ஒர் சர்ச்சையை கிளப்பியிருந்தது நினைவில் இருக்கலாம். ஏற்கனவே பின்லேடன் கொல்லப்பட்ட புகைப்படம் என வாசிங்டனினால் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டவை என்பதை ஒபாமாவே ஏற்றுக்கொண்டிருப்பினும் பின்லேடனின் மரணத்தை உறுதிப்படுத்தினார்.




Sunday, August 7, 2011

உலகில் முன் தோன்றிய பகுத்தறிவாளன் வள்ளுவன் [Valluvar Alive Tamil Blog]


வள்ளுவரைத் தமிழ்கூறும் உலகில் தோன்றிய முதல் பகுத்தறிவாளர் எனக் கூறலாம். ஏனெனில் எந்தவொரு கருத்தையும், சிந்தனையையும் உள்ளவாறு ஏற்காமல் பகுத்து நோக்கி, என்ன ஏது என்று ஆராய்ந்து உள்ளத் தெளிவு பெற்று ஏற்க வேண்டும் என்பதையே வள்ளுவர் கூறுகிறார்.




Saturday, August 6, 2011

விடியல் இல்லை என விழிகளை மூடாதே விளக்கினை ஏற்று [Revolution Alive Tamil Blog]


இருபதாம் நூற்றாண்டு பல இணையற்ற புரட்சிகளை பதிவு செய்தது, இவ்வுலகிற்கு பல வீர தீரம் மிக்க போராளிகளை அடையாளம் காட்டியது. பாரெங்கும் பண்ணையர்கள் கூட்டம் திண்ணை நிலத்தையும் விடாது அபகரித்த காலம், செங்கொடி ஏந்தி செருப்படி கொடுத்து அவர்கள் செருக்கை அடக்கினார்கள்; சமவுடமை பிறந்தது. செங்குருதிகள் ஆறாக உடலங்கள் சிதறி வேறாக உலகையே உலுக்கியது இனப்படுகொலைகள், புரட்சிகள் பூத்தன, இப்பூக்கள் காயாகின, கனியாகின, கனிகள் விதையாகின, விதைகள் பல மரங்களாகின‌, புதிதாய் பல தேசங்கள் மலர்ந்தன. கொள்ளையிட வந்த கூட்டம் கோட்டையை நிறுவி கொடியினை ஏற்றையிலும், வெள்ளையனை வெளியேற்று அன்றேல் வீரமரணம் எய்து என்ற வெறியே; விடுதலை எனும் வெற்றிக்கனி. அறிவுப்புரட்சிகள், தொழிலாளர்களின் புரட்சிகள், இன, மொழிப் புரட்சிகள் என ஏராளம் மக்கள் புரட்சிகள் வெற்றி கண்டன. எகிப்திலும் லிபியாவிலும் ஏற்பட்ட மக்கள் புரட்சிகள்  இன்று எம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றன.




Friday, August 5, 2011

மனித வாழ்வியலில் திருக்குறளின் அவசியம் [Thirukural Alive Tamil Blog]]


உயர் கல்வியின் பொருட்டு வெளியூர் செல்லவேண்டிய நிற்பந்தம், இவ்வளவு காலமும் தாய் தந்தையரின் அரவணைப்பில் வாழ்ந்த ஒரு இளைஞன் முதல் முறையாக பெற்றோரை பிரிந்து செல்லுகின்றான். அவனுக்கு எதை கொண்டு செல்லவேண்டும் எதை தவிர்க்கவேண்டும் என்பதில் ஒரு தடுமாற்றம். எப்படியான ஆடைகளை தெரிவுசெய்வது? இதுவரை படித்த நூல்கள் ஏதேனும் தேவைப்படுமா? புதிய மொழி, கலாச்சார அமைப்புக்கொண்ட பிரதேசத்தில் எப்படி சவால்களை எதிர் கொள்வது? போன்ற எண்ணற்ற கேள்விகள் அவனது ஆழ் மனதில் எழுந்தன. அதற்கு அவனுடைய தந்தை புறப்படும் பொழுது அவனுக்கு ஒரு திருக்குறள் நூலை கொடுத்து மூன்றே மூன்று வார்த்தைகளை மட்டுமே கூறி வழியனுப்பினார் புதிய கலாச்சாரம், புதிய வாழ்க்கை நெறிகள் வென்றுவா மகனே!. கூடி நின்ற‌ நண்பர்களுக்கு ஓர் ஏழனச்சிரிப்பு, காரணம் அவனது கற்கை நெறி கணிதத்துறை சார்ந்தது இவர் என்ன திருக்குறளை கொடுத்தனுப்புகிறாரே..




பகுத்தறிவு என்றால் என்ன? [Atheism Alive Tamil blog]


மனித மூளையின் ஆற்றலினால் தோன்றுகின்ற சிந்தனாசக்தியின் விழைவால் அவனது மனதிலே நன்றும் தீதுமாய் எண்ணங்கள் கலந்திருக்கின்றன. இவற்றுள் நன்று எது தீது எது அன அறியும் நுண்ணிய ஆற்றலே பகுத்தறிவாகும். மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியமான விடயங்களை மனிதன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே பகுத்தறிவின் கருப்பொருள் ஆகும். ஆனால் இந்த சிந்தனாசக்தியும் பகுத்தறிவும் படைத்த மனிதன் சில மூடக்கொள்கைகளை ஏற்று உண்மைக்கும் நீதிக்கும் புறம்பான பாதையில் பயணிக்கின்றான் என்பது வருந்தத்தக்க விடயமாகும்.




Sunday, July 31, 2011

மார்க்சியமும் அதன் மெய்யியல் கோட்பாடுகளும் [Marxism Alive Tamil Blog]


பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கால் மார்க்ஸ் (Karl Marx) பெரிடிரிச் ஏங்கலஸ் (Friedrich Engels) ஆகியோரால் பரிந்துரைக்கப்பட்ட மெய்யியல், பொருளியல் மற்றும் சமுக அரசியல் தொடர்பான தத்துவமே மார்க்சியம் ஆகும். இக்கோட்பாடே மூலதனம் என்ற மூலமந்திரத்திற்கு வித்திட்டு முதலாளித்துவத்திற்கு முழு எதிரியாய் விளங்குகிறது.




வேண்டும் விடுதலை; காஷ்மீர் மக்கள் [Kashmir Alive Tamil Blog]



காஷ்மீர் பிரச்னை என்பது இந்திய அரசுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் இடையிலான பிரச்னை என்றும், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான யுத்தம் என்பது போன்றும், காஷ்மீரிகளின் அடையாளம் மற்றும் சுதந்திர வேட்கைக்கான போராட்டம் என்றும், இந்திய இராணுவப் படையினர் போராளிகளிடம் இருந்து காஷ்மீர் மக்களை காப்பாற்றிவிடவே நடத்தப்படும் யுத்தம் என்றும், இந்திய ராணுவத்தினரிடம் இருந்து காஷ்மீர் மக்களை காப்பாற்றவே போராளிகள் நடத்தும் யுத்தம் என்பதாகவும் பல கண்ணோட்டங்களில் பார்க்கப்படுகிறது. எந்த கண்ணோட்டத்தில் பார்த்தாலும் ஒன்று மட்டும் தெளிவாகிறது, காஷ்மீர் மக்கள் விடுதலை ஒன்றையே விரும்புகிறார்கள். நாங்கள் இந்தியர்களல்லர் பாக்கீஸ்தானிகள் அல்லர் நாங்கள் காஷ்மீரியர்கள் என்பதையே ஓர்மமாக உரத்து ஒலிக்கிறார்கள்.




Tuesday, July 26, 2011

உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன் [Senbaharaman Alive tamil blog]



எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட்பார் அற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. உலக சர்வாதிகாரியான ஹிட்லரையே மன்னிப்பு கோரச்செய்தவன் அடி பணியவைத்தவன் ஒருவன் உள்ளான். என்றால் நம்புவீர்களா அதுவும் அவன் ஒரு தமிழன் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள். ஆம் தோழர்களே அந்த வீரன் வேறுயாருமில்லை அவன் தான் மாவீரன் செண்பகராமன். மாவீரன் செண்பகராமனை எத்தனை பேர் அறிவீர்கள்? ஒரு வேடிக்கையான விடையம் தமிழக அரசே 2009 ஆம் ஆண்டு தான் மாவீரன் செண்பகராமனை இனங்கண்டு கொண்டு அவரை கெளரவித்து சிலை ஒன்றை நிறுவியது.




நித்தியானந்தாவின் காணொளியும் ஊடகங்களின் பரப்புரையும் [Tamil media Alive tamil]



தனி மனித ஒழுக்கம் தவறிச் செயற்படுபவர்களுக்கு நித்தியானந்தாவின் வாழ்க்கை ஒரு எச்சரிக்கையாக விளங்குகிறது. இன்றைக்கு எல்லா இணையத் தளங்களிலும் பத்திரிகைகளிலும் ஒரு மூலையிலாவது நித்தியாநந்தா தொடர்பான‌ செய்திக‌ள் இல்லாமலில்லை. தொலைக்காட்சியிலும் கூட இது தொடர்பான செய்திகளுக்கு தனியிடம் ஒதுக்கப்படுகிறது. இதற்கு காரணம் என்ன? உண்மையிலேயே போலிச்சாமியார்களின் முகத்திரையை கிழித்தி அவர்களின் காமலீலைகளை அம்பலப்படுத்தி மக்களுக்கும் இந்த சமுதாயத்திற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி இது போன்ற செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுத்து சமூகத்தை அறத்தோடும் நாட்டை நன்நெறியோடும் வாழவைக்கவேண்டும் என்ற நோக்கத்திற்காகவா இத்தைய காணொளிகள், புகைப்படங்களை தொலைக்காட்சிகளில் பத்திரிகைகளில் வெளியிடுகிறார்கள்?




Monday, July 25, 2011

முதலாழிகள் தங்களைப்பற்றியே சிந்திக்கிறார்கள் ஏழைகள் ஏழையாகவே இருக்கிறார்கள் - மாவோவின் வரலாற்றுப்பயணம் #1 [1 Mao Tse Tung best Alive tamil blog]



  துள்ளி விளையாடவேண்டிய பருவம், பள்ளி சென்று படிக்கவேண்டிய வயது அந்த சிறுவனைப்போய் வயல் வேலைகளை செய்யுமாறு உத்தரவிடுகிறார் தந்தை ஷன்செங். இவன் பின்னாளில் வளர்ந்து ஒரு பெரிய சமூக புரட்சியை சீனதேசத்தில் ஏற்படுத்தி மாவோ சேதுங் என்றசீன கம்யூனிசத்தலைவனாக வருவான் என்று அவருடைய தந்தை கனவிலும் நினைத்திருக்கமாட்டார். ஷன்செங்கை பொறுத்தவரை மாவோ ஒரு பொறுப்பற்ற மகனாக, தந்தை சொல் கேட்காதவனாக, தந்தையை எதிர்த்து பேசுகின்ற வாயாடியாகவே பார்க்கப்பட்டான். ஷன்செங் ஆரம்பத்தில் ஒரு ஏழை விவசாயியாகத்தான் இருந்தார் எனினும் சிறிது சிறிதாக பணம் சம்பாதித்துசின்னச்சின்ன முதலீடுகளை செய்து குறுகிய காலத்துக்குள்ளேயே பெரிய பணக்காரராக வளர்ச்சியடைந்தார். ஏக்கர் கணக்கான நிலங்களுக்கு சொந்தக்காரரானார், அவருக்கு கீழே பல தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினார். பணம் பெருகப்பெருகவட்டிக்கு விடும் தொழிலையும் ஆரம்பித்தார்.




Sunday, July 24, 2011

பெளத்த மத துறவிகளும் புத்தரின் போதனைகளும்[lord buddha best alive tamil blog]



   கடவுளே இல்லை என்று உலகுக்கு போதித்தவன் புத்தன் அவனையே கும்பிடுகிறான் ஒரு பித்தன். ஆம் நண்பர்களே பெளத்தம் என்பது இல்லறம் செழிக்கும் நல்வாழ்விற்கான பாதை அல்லது ஒரு தத்துவம். வாழ்வை இன்பமாக கழிக்க உலக ஆசைகளை துறக்கவேண்டும், அன்பை மட்டுமே வளர்க்க வேண்டும்; அமைதியான தியானத்தின் மூலம் மனிதன் இந்த ஞானத்தை அடையவேண்டும் என்கிறார் புத்தர்.




நடிகர் ரஜனிகாந்த் உயிர் பிழைத்தார், ரசிகன் ரஜனி வெங்கடேசன் உயிரிழந்தார் இது மகிழ்ச்சியா? துக்கமா? இல்லை வெட்கமா?[Tamil cinema Actor rajanikant recovered alivetamil alive tamil blog website]



மருத்துவர்களின் அயராத உழைப்பு தமிழ் சினிமாவின் விசேடநட்சத்திரம் ரஜனிகாந்தை பாரதூரமானநோய்களில் இருந்து காப்பாற்றி தமிழகத்தில் மீண்டும் கால் பதிக்கவைத்தது. தற்சமையம் உடல் நிலை நன்கு தேறியதால் ரணா திரைப்பட விவாதங்களில் ரஜனி மீண்டும் இறங்கியுள்ளார்.




Friday, July 22, 2011

ஆயுத முனையில் ஓர் பத்திரிகை விற்பனை ஊடக சுதந்திரத்தின் உச்சமா? ஜனநாயகத்திற்கு வந்த அச்சமா? [Media freedom democracy Alivetamil]



அடுப்பங்கரை பெண்மணியின் அவலங்கள் கூற ஒரு சிறு இடமில்லை _ அனால்
அட்டைப் படத்திலோ அரைகுறை உடையில் ஓர் அம்மணி...
கொட்டை எழுத்தில் சினிமாப்படத்திற்கு விளம்பரம் _ அதை வாசி என
வாரம் மொருமுறை மொக்கை பத்திரிகை ஒன்று வலம்வரும்




ஈராக்கில் ஊடகவியலாளர்கள் மீதான அமெரிக்க இராணுவ தாக்குதல்கள் (காணொளி இணைக்கப்பட்டுள்ளது) [U.S. military attacks on journalists in Iraq video: by Alivetamil]




ஈராக் தலைநகர் பக்தாக்கில் 2007 ஆம் ஆண்டு அமெரிக்க வான் படையினரால் நடாத்தப்பட்ட தாக்குதலின் காணொளிகளை விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக அமெரிக்க மற்றும் உலக இரகசியங்களை உள்ளடக்கிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டு பல பரபரப்புக்களை ஏற்படுத்தி கொண்டிருக்கையிலே இறுதியாக வெளியிடப்பட்ட இந்த காணொளியானது மனித உரிமை ஆர்வலர்களை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.




Wednesday, July 20, 2011

கடவுளை யாரு படைத்தான்? (தமிழ் சினிமா பாடல் காணொளி இணைக்கப்பட்டுள்ளது) [Who created god periyar tamil cinema video song by Alivetamil blog]


எவன்டி உன்னை பெத்தான் பெத்தான்.. அவன் கையில் கிடைச்சா செத்தான் செத்தான்.. மூஞ்சப்பாரு மூஞ்சப்பாரு.. இப்படியான தமிழ் சினிமாப் பாடல்கள் மத்தியில் பகுத்தறிவுப் போதனைகளை ஊட்டக்கூடிய பாடல்களும் ஆங்காங்கே வெளியாகி இருப்பது சற்று ஆறுதல் அளிக்கின்ற விடையமாகும். இருந்தாலும் போலி காகிதப் பூக்களின் விளம்பரத் திறமையால் நியப்பூக்கள் சோரம் போய்விடக்கூடாது என்ற எண்ணத்தோடு இத்த பாடல்களை  பதிவுசெய்கிறேன்.





Tuesday, July 19, 2011

தற்கால உலகில் ஆங்கிலத்தின் அவசியம் (ஒரு நகைச்சுவை பதிவு) [Importance of english language Alivetamil blog]

 

இன்று உலகமே சுருங்கி ஓர் உள்ளங்கையில் வந்துவிட்டது. உலக சனத்தொகை வளர்ச்சி, வளங்களின் சமனற்ற பரம்பல் போன்ற பல காரணங்களால் ஒரு மனிதன் சக மனிதனில் தங்கி வாழ வேண்டிய சூள்நிலைக்குள் தள்ளப்பட்டுள்லான். மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் மனிதர்களை மேலும் நெருக்கமாக்கியது. இனங்கள் கடந்து, நாடுகள் கடந்து தொடர்புகளை மேற்கொள்ளும் போது பொது மொழியான ஆங்கிலத்தின் அவசியம் மேலோங்குகிறது. ஆங்கிலம் எல்லோரும் அறிந்திருக்கவேண்டிய அவசியமொழியாக மாறியிருக்கிறது.




Welcome to Alivetamil Blog www.alivetamil.blogspot.com


சாதி மத சகிதியில் இருந்து தமிழனை மனிதனாக வாழவைத்த தந்தை பெரியாரின் பேரனாய், தமிழ் உணர்வோடும் தன்மானத்தோடும் தலை நிமிர்ந்த பண்டாரவன்னியன் வழி வந்த வீரனாய் வாழும் என் தமிழ் உறவுகளுக்கு உற்சாகமாய் தோள் கொடுத்து பகுத்தறிவையும் இன உணர்வையும் ஊட்டும் கலிங்கம் போன்றது இத்தளம். பட்டையைப் பூசி கொட்டையைக் கட்டிப் பகல் வேடம் போட்டுப் பாமரரை ஏமாற்றும் பகற் கொள்ளைக்காரப் பார்ப்பானிற்கு இத்தளம் பாஷணம் போன்றது. யாரையும் புண்படுத்தும் நோக்கம் அடியேனுக்கு கிடையாது சமூகப்புரட்சிகளையும் பகுத்தறிவுப் போதனைகளையும் இளையோர் கற்றுக் காமுற வேண்டும் என்பது அவா.

மததால் சாதியால் இடத்தால் (பிரதேச வாதத்தால்) நாம் பிளவுபட்டு இழந்ததெல்லாம் போதும்.. தமிழன் என்ற ஓர் அணியில் இணைவோம்..எம் முன்னால் உள்ள‌ தடைக்கற்களெல்லாம் படிக்கற்களாகட்டும்.. தரணியை தமிழினம் ஆளட்டும்..

உலகத்தமிழர்களெ ஒன்றுபடுங்கள்!

தோழர்களே வாருங்கள் ஒன்றாக வடம் பிடிப்போம்

வரலாற்றிலே இடம் பிடிப்போம்.


தமிழ்பிரியன்

சாவில் தமிழ் படித்து சாகவேண்டும் என்

சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்

alivetamil@gmail.com

Related Posts Plugin for WordPress, Blogger...

கட்டுரைகள்

Rationality Tamil Society & Politics
கடவுள் மனிதனைப்படைத்தானா? மனிதன் கடவுளைப்படைத்தானா? Who created the God By Alive tamil அழிவை நோக்கிய பாதையில் தமிழ்மொழி பயணிக்கிறது!Tamil is disappearing By Alive tamil மார்க்சியமும் அதன் மெய்யியல் கோட்பாடுகளும் Marxism By Alive tamil
பகுத்தறிவு என்றால் என்ன? What is Rationality By Alive tamil மறைக்கப்பட்ட எல்லாளனின் சமாதி The hidden tomb of Ellalan By Alive tamil பிரடெரிக் எங்கல்ஸின் பார்வையில் பாட்டாளி வர்க்கம் proletariat By Alive tamil
தீ மிதித்தல் அலகு குற்றுதல் அருளா அல்லது அறிவியலா? By Alive tamil மனித வாழ்வியலில் திருக்குறளின் அவசியம் Importance of Thirukural By Alive tamil மாவோவின் வரலாற்று பயணம் History of Mao zedung By Alive tamil
உலகில் முன் தோன்றிய பகுத்தறிவாளன் வள்ளுவன் Valluvar By Alive tamil உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன் Senbaharaman By Alive tamil வேண்டும் விடுதலை காஷ்மீர் மக்கள் Freedom of Kashmir By Alive tamil

 
  •  

    RSS Feed

    facebook

    Twitter

    Youtube

    Indli

    Tamilmanam