Sunday, July 31, 2011

மார்க்சியமும் அதன் மெய்யியல் கோட்பாடுகளும் [Marxism Alive Tamil Blog]


பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கால் மார்க்ஸ் (Karl Marx) பெரிடிரிச் ஏங்கலஸ் (Friedrich Engels) ஆகியோரால் பரிந்துரைக்கப்பட்ட மெய்யியல், பொருளியல் மற்றும் சமுக அரசியல் தொடர்பான தத்துவமே மார்க்சியம் ஆகும். இக்கோட்பாடே மூலதனம் என்ற மூலமந்திரத்திற்கு வித்திட்டு முதலாளித்துவத்திற்கு முழு எதிரியாய் விளங்குகிறது.




வேண்டும் விடுதலை; காஷ்மீர் மக்கள் [Kashmir Alive Tamil Blog]



காஷ்மீர் பிரச்னை என்பது இந்திய அரசுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் இடையிலான பிரச்னை என்றும், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான யுத்தம் என்பது போன்றும், காஷ்மீரிகளின் அடையாளம் மற்றும் சுதந்திர வேட்கைக்கான போராட்டம் என்றும், இந்திய இராணுவப் படையினர் போராளிகளிடம் இருந்து காஷ்மீர் மக்களை காப்பாற்றிவிடவே நடத்தப்படும் யுத்தம் என்றும், இந்திய ராணுவத்தினரிடம் இருந்து காஷ்மீர் மக்களை காப்பாற்றவே போராளிகள் நடத்தும் யுத்தம் என்பதாகவும் பல கண்ணோட்டங்களில் பார்க்கப்படுகிறது. எந்த கண்ணோட்டத்தில் பார்த்தாலும் ஒன்று மட்டும் தெளிவாகிறது, காஷ்மீர் மக்கள் விடுதலை ஒன்றையே விரும்புகிறார்கள். நாங்கள் இந்தியர்களல்லர் பாக்கீஸ்தானிகள் அல்லர் நாங்கள் காஷ்மீரியர்கள் என்பதையே ஓர்மமாக உரத்து ஒலிக்கிறார்கள்.




Tuesday, July 26, 2011

உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன் [Senbaharaman Alive tamil blog]



எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட்பார் அற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. உலக சர்வாதிகாரியான ஹிட்லரையே மன்னிப்பு கோரச்செய்தவன் அடி பணியவைத்தவன் ஒருவன் உள்ளான். என்றால் நம்புவீர்களா அதுவும் அவன் ஒரு தமிழன் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள். ஆம் தோழர்களே அந்த வீரன் வேறுயாருமில்லை அவன் தான் மாவீரன் செண்பகராமன். மாவீரன் செண்பகராமனை எத்தனை பேர் அறிவீர்கள்? ஒரு வேடிக்கையான விடையம் தமிழக அரசே 2009 ஆம் ஆண்டு தான் மாவீரன் செண்பகராமனை இனங்கண்டு கொண்டு அவரை கெளரவித்து சிலை ஒன்றை நிறுவியது.




நித்தியானந்தாவின் காணொளியும் ஊடகங்களின் பரப்புரையும் [Tamil media Alive tamil]



தனி மனித ஒழுக்கம் தவறிச் செயற்படுபவர்களுக்கு நித்தியானந்தாவின் வாழ்க்கை ஒரு எச்சரிக்கையாக விளங்குகிறது. இன்றைக்கு எல்லா இணையத் தளங்களிலும் பத்திரிகைகளிலும் ஒரு மூலையிலாவது நித்தியாநந்தா தொடர்பான‌ செய்திக‌ள் இல்லாமலில்லை. தொலைக்காட்சியிலும் கூட இது தொடர்பான செய்திகளுக்கு தனியிடம் ஒதுக்கப்படுகிறது. இதற்கு காரணம் என்ன? உண்மையிலேயே போலிச்சாமியார்களின் முகத்திரையை கிழித்தி அவர்களின் காமலீலைகளை அம்பலப்படுத்தி மக்களுக்கும் இந்த சமுதாயத்திற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி இது போன்ற செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுத்து சமூகத்தை அறத்தோடும் நாட்டை நன்நெறியோடும் வாழவைக்கவேண்டும் என்ற நோக்கத்திற்காகவா இத்தைய காணொளிகள், புகைப்படங்களை தொலைக்காட்சிகளில் பத்திரிகைகளில் வெளியிடுகிறார்கள்?




Monday, July 25, 2011

முதலாழிகள் தங்களைப்பற்றியே சிந்திக்கிறார்கள் ஏழைகள் ஏழையாகவே இருக்கிறார்கள் - மாவோவின் வரலாற்றுப்பயணம் #1 [1 Mao Tse Tung best Alive tamil blog]



  துள்ளி விளையாடவேண்டிய பருவம், பள்ளி சென்று படிக்கவேண்டிய வயது அந்த சிறுவனைப்போய் வயல் வேலைகளை செய்யுமாறு உத்தரவிடுகிறார் தந்தை ஷன்செங். இவன் பின்னாளில் வளர்ந்து ஒரு பெரிய சமூக புரட்சியை சீனதேசத்தில் ஏற்படுத்தி மாவோ சேதுங் என்றசீன கம்யூனிசத்தலைவனாக வருவான் என்று அவருடைய தந்தை கனவிலும் நினைத்திருக்கமாட்டார். ஷன்செங்கை பொறுத்தவரை மாவோ ஒரு பொறுப்பற்ற மகனாக, தந்தை சொல் கேட்காதவனாக, தந்தையை எதிர்த்து பேசுகின்ற வாயாடியாகவே பார்க்கப்பட்டான். ஷன்செங் ஆரம்பத்தில் ஒரு ஏழை விவசாயியாகத்தான் இருந்தார் எனினும் சிறிது சிறிதாக பணம் சம்பாதித்துசின்னச்சின்ன முதலீடுகளை செய்து குறுகிய காலத்துக்குள்ளேயே பெரிய பணக்காரராக வளர்ச்சியடைந்தார். ஏக்கர் கணக்கான நிலங்களுக்கு சொந்தக்காரரானார், அவருக்கு கீழே பல தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினார். பணம் பெருகப்பெருகவட்டிக்கு விடும் தொழிலையும் ஆரம்பித்தார்.




Sunday, July 24, 2011

பெளத்த மத துறவிகளும் புத்தரின் போதனைகளும்[lord buddha best alive tamil blog]



   கடவுளே இல்லை என்று உலகுக்கு போதித்தவன் புத்தன் அவனையே கும்பிடுகிறான் ஒரு பித்தன். ஆம் நண்பர்களே பெளத்தம் என்பது இல்லறம் செழிக்கும் நல்வாழ்விற்கான பாதை அல்லது ஒரு தத்துவம். வாழ்வை இன்பமாக கழிக்க உலக ஆசைகளை துறக்கவேண்டும், அன்பை மட்டுமே வளர்க்க வேண்டும்; அமைதியான தியானத்தின் மூலம் மனிதன் இந்த ஞானத்தை அடையவேண்டும் என்கிறார் புத்தர்.




நடிகர் ரஜனிகாந்த் உயிர் பிழைத்தார், ரசிகன் ரஜனி வெங்கடேசன் உயிரிழந்தார் இது மகிழ்ச்சியா? துக்கமா? இல்லை வெட்கமா?[Tamil cinema Actor rajanikant recovered alivetamil alive tamil blog website]



மருத்துவர்களின் அயராத உழைப்பு தமிழ் சினிமாவின் விசேடநட்சத்திரம் ரஜனிகாந்தை பாரதூரமானநோய்களில் இருந்து காப்பாற்றி தமிழகத்தில் மீண்டும் கால் பதிக்கவைத்தது. தற்சமையம் உடல் நிலை நன்கு தேறியதால் ரணா திரைப்பட விவாதங்களில் ரஜனி மீண்டும் இறங்கியுள்ளார்.




Friday, July 22, 2011

ஆயுத முனையில் ஓர் பத்திரிகை விற்பனை ஊடக சுதந்திரத்தின் உச்சமா? ஜனநாயகத்திற்கு வந்த அச்சமா? [Media freedom democracy Alivetamil]



அடுப்பங்கரை பெண்மணியின் அவலங்கள் கூற ஒரு சிறு இடமில்லை _ அனால்
அட்டைப் படத்திலோ அரைகுறை உடையில் ஓர் அம்மணி...
கொட்டை எழுத்தில் சினிமாப்படத்திற்கு விளம்பரம் _ அதை வாசி என
வாரம் மொருமுறை மொக்கை பத்திரிகை ஒன்று வலம்வரும்




ஈராக்கில் ஊடகவியலாளர்கள் மீதான அமெரிக்க இராணுவ தாக்குதல்கள் (காணொளி இணைக்கப்பட்டுள்ளது) [U.S. military attacks on journalists in Iraq video: by Alivetamil]




ஈராக் தலைநகர் பக்தாக்கில் 2007 ஆம் ஆண்டு அமெரிக்க வான் படையினரால் நடாத்தப்பட்ட தாக்குதலின் காணொளிகளை விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக அமெரிக்க மற்றும் உலக இரகசியங்களை உள்ளடக்கிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டு பல பரபரப்புக்களை ஏற்படுத்தி கொண்டிருக்கையிலே இறுதியாக வெளியிடப்பட்ட இந்த காணொளியானது மனித உரிமை ஆர்வலர்களை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.




Wednesday, July 20, 2011

கடவுளை யாரு படைத்தான்? (தமிழ் சினிமா பாடல் காணொளி இணைக்கப்பட்டுள்ளது) [Who created god periyar tamil cinema video song by Alivetamil blog]


எவன்டி உன்னை பெத்தான் பெத்தான்.. அவன் கையில் கிடைச்சா செத்தான் செத்தான்.. மூஞ்சப்பாரு மூஞ்சப்பாரு.. இப்படியான தமிழ் சினிமாப் பாடல்கள் மத்தியில் பகுத்தறிவுப் போதனைகளை ஊட்டக்கூடிய பாடல்களும் ஆங்காங்கே வெளியாகி இருப்பது சற்று ஆறுதல் அளிக்கின்ற விடையமாகும். இருந்தாலும் போலி காகிதப் பூக்களின் விளம்பரத் திறமையால் நியப்பூக்கள் சோரம் போய்விடக்கூடாது என்ற எண்ணத்தோடு இத்த பாடல்களை  பதிவுசெய்கிறேன்.





Tuesday, July 19, 2011

தற்கால உலகில் ஆங்கிலத்தின் அவசியம் (ஒரு நகைச்சுவை பதிவு) [Importance of english language Alivetamil blog]

 

இன்று உலகமே சுருங்கி ஓர் உள்ளங்கையில் வந்துவிட்டது. உலக சனத்தொகை வளர்ச்சி, வளங்களின் சமனற்ற பரம்பல் போன்ற பல காரணங்களால் ஒரு மனிதன் சக மனிதனில் தங்கி வாழ வேண்டிய சூள்நிலைக்குள் தள்ளப்பட்டுள்லான். மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் மனிதர்களை மேலும் நெருக்கமாக்கியது. இனங்கள் கடந்து, நாடுகள் கடந்து தொடர்புகளை மேற்கொள்ளும் போது பொது மொழியான ஆங்கிலத்தின் அவசியம் மேலோங்குகிறது. ஆங்கிலம் எல்லோரும் அறிந்திருக்கவேண்டிய அவசியமொழியாக மாறியிருக்கிறது.




Monday, July 18, 2011

தமிழினங் காணா ஆயுதம் - தமிழன் ஏந்தாத ஆயுதம் [World tamils must join together]



ஆதியிலேயே ஆயுதம் கண்டான் தமிழன்
ஆனையை எதிர்க்கும் வீரியம் கொண்டான்
சேனையை பெருக்கிப் பல போர்க்களம் வென்றான்
வானையே விஞ்சும் வளர்ச்சியைப் பெற்றான்




Sunday, July 17, 2011

சோமாலிய கடற்கொள்ளையர்களும் பன்னாட்டு முதலாழித்துவ கொள்ளையர்களும் [Somali pirates-robbers]



உலக வல்லாதிக்க நாடுகளெல்லாம் ஓர் அணியில் திரள்கின்றன. தத்தமது கடற்படை வீரர்களை தாங்கிய கப்பல்களை ஏடன் வளைகுடாவை நோக்கி நகர்த்துகின்றன. சர்வதேசத்தின் பார்வையானது சோமாலியா மீது திரும்புகிறது. எதற்காக? பசி, பஞ்சம், பட்டினிச்சாவு, உள்நாட்டு யுத்தம், கொடிய நோய்களான எயிட்ஸ், புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகள் ஏதும் அற்று வாழுகின்ற சோமாலிய‌ மக்களின் துயரங்களை திரும்பியும் பார்க்கவிரும்பாத இந்த வல்லாதிக்க நாடுகளை, சோமாலியா நோக்கி தனது கவனத்தை ஈர்க்கவைத்தது சோமாலியக் கடற்கொளைகள் என்றால் அது மிகையாகாது. ஆம் ஒவ்வொரு ஆண்டும் ஏடன் வளைகுடாவில் கடத்தப்படும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் அதேவேளை அவர்களது அச்சுறுத்தலுக்கு உட்பட்ட கடல் பரப்புக்களும் விஸ்தரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.




பிரடெரிக் எங்கல்ஸின் பார்வையில் பாட்டாளி வர்க்கம் [What is proletariat by friedrich engels]



எந்த வர்க்கம் சமுதாயத்திலுள்ள ஏதேனுமொரு மூலதனத்திலிருந்து கிடைக்கும் லாபத்தின் மூலம் தனது வாழ்க்கைக்கான தேவைகளைப் பெறாமல், தனது உழைப்பை விற்பதன் மூலம் அவையனைத்தையும் பெறுகின்றதோ, அதுவே பாட்டாளி வர்க்கமாகும். எந்த வர்க்கத்தின் சுகமும் துக்கமும், வாழ்வும் சாவும், ஏன் வாழ்க்கை முழுவதுமே, உழைப்பிற்கான தேவையினை சார்ந்தாகவும், அதன் காரணமாக, தொழில் நன்கு நடக்கும் காலத்தையும் தங்கு தடையற்ற போட்டியின் விளைவாக ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை சார்ந்ததாகவும் இருக்கின்றதோ அந்த‌ வர்க்கம் தான் பாட்டாளி வர்க்கமாகும். சுருங்கக்கூறினால் பாட்டாளி வர்க்கம் என்பது 19 ஆம் நூற்றாண்டு கண்டெடுத்த தொழிலாளி வர்க்கமாகும் என வரையறை செய்கிறார் பிரடெரிக் எங்கல்ஸ்.





Friday, July 15, 2011

ஆலயங்களில் உயிர்ப்பலி (காணொளி இணைக்கப் பட்டுள்ளது) [Killers in temples]


சைவ ஆலயங்களில் உயிர் பலி எடுக்கும் நிகழ்வானது மனதை நெருட்டுகின்ற ஒரு சம்பவமாகும். எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்து என்று சொல்லுகின்ற இந்துமத போதனைகளுக்கும் மதவாதிகளின் இத்தகைய செயற்பாடுகளுக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை என்பது கண்கூடு. மதம் என்ற போர்வையில் வருமானம் சுறண்டி, கொழுக்கும் இந்த பார்ப்பானிய கூட்டங்களை தமிழர்கள் எங்கணம் பலி எடுப்பார்களோ?




Thursday, July 14, 2011

மறைக்கப்பட்ட எல்லாளனின் சமாதி : பாகம் 2 [The hidden tomb of ellalan tamil king: part 2]

மறைக்கப்பட்ட எல்லாளனின் சமாதி என்ற பதிவின் தொடர்ச்சி.. முதற்பதிவை வாசிக்கவும் பாகம் 1

மகாவம்சத்தை மொழிபெயர்த்த கைகர்  "நிசிம மாலக்க" என்ற பதத்தை பின்வருமாறு மொழிபெயர்த்தார். அரசனின் சடலம் மகா விகாரைக்கு வெளியே உள்ள மாலக்கவில் தகனம் செய்யப்பட்டுள்ளது என்று தவறாக மொழிபெயர்த்தார். இதற்குரிய சரியான மொழிபெயர்ப்பை அபய ஆரியசிங்க என்பவர் பிற்காலத்தில் வெளியிட்டார். சரியான மொழிபெயர்ப்பின்படி நிசிம மாலக்க என்பது "வழக்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சடங்குகளுக்கு பொருத்தமில்லாத இடம் ஆகும்". அதாவது மன்னனாக இருந்தாலும் ஒரு உடல் தகனம் செய்யப்பட்டதால் அவ்விடமானது புனித சமயச் சடங்குகளுக்கு பொருத்தமற்றது என்பதால் பெளத்த சங்கத்தினர் இவ்விடத்தை கைவிட்டு தமது சங்க கம்மாவை வேறு இடத்தில் நடத்த விரும்பினார்கள்.




மறைக்கப்பட்ட எல்லாளனின் சமாதி : பாகம் 1 [The hidden tomb of ellalan tamil king: part 1]




இயற்கையவள் ஆதரவால் பகல் பொழுதில் கதிரவன் காட்சியளிக்க இரவிலே கார்முகில்கள் மழை பொழிய செல்வச்செழிப்பு எய்தப்பெற்றவனாய் ஒப்பாரும் மிக்காரும் இன்றி நேர்மையோடு இச்சை, வெறுப்பு, பயம், மாயை ஆகியவற்றை கடந்து செங்கோல் ஓச்சி வந்தான் எல்லாள மன்னன் என்று இந்த ஞாலமே வியந்து போற்றுகையில் நாமும் தமிழன் என்று சொல்லி நெஞ்சை நிமிர்த்துகின்றோம். இருப்பினும் இரண்டாயிரம் ஆண்டுகளைத் தாண்டி எல்லாள மன்னனது அஸ்தியும் சமாதியும் அதன் மீது பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களும் தந்திரமான முறையில் மறைக்கப்பட்டிருக்கின்றது அல்லது மறுக்கப்பட்டிருக்கின்றது என்பதை அறியாமல் எம்மில் பலர் அறியாமல் இருக்கிறோம் என்பதுதான் வருத்தமான செய்தி.





Welcome to Alivetamil Blog www.alivetamil.blogspot.com


சாதி மத சகிதியில் இருந்து தமிழனை மனிதனாக வாழவைத்த தந்தை பெரியாரின் பேரனாய், தமிழ் உணர்வோடும் தன்மானத்தோடும் தலை நிமிர்ந்த பண்டாரவன்னியன் வழி வந்த வீரனாய் வாழும் என் தமிழ் உறவுகளுக்கு உற்சாகமாய் தோள் கொடுத்து பகுத்தறிவையும் இன உணர்வையும் ஊட்டும் கலிங்கம் போன்றது இத்தளம். பட்டையைப் பூசி கொட்டையைக் கட்டிப் பகல் வேடம் போட்டுப் பாமரரை ஏமாற்றும் பகற் கொள்ளைக்காரப் பார்ப்பானிற்கு இத்தளம் பாஷணம் போன்றது. யாரையும் புண்படுத்தும் நோக்கம் அடியேனுக்கு கிடையாது சமூகப்புரட்சிகளையும் பகுத்தறிவுப் போதனைகளையும் இளையோர் கற்றுக் காமுற வேண்டும் என்பது அவா.

மததால் சாதியால் இடத்தால் (பிரதேச வாதத்தால்) நாம் பிளவுபட்டு இழந்ததெல்லாம் போதும்.. தமிழன் என்ற ஓர் அணியில் இணைவோம்..எம் முன்னால் உள்ள‌ தடைக்கற்களெல்லாம் படிக்கற்களாகட்டும்.. தரணியை தமிழினம் ஆளட்டும்..

உலகத்தமிழர்களெ ஒன்றுபடுங்கள்!

தோழர்களே வாருங்கள் ஒன்றாக வடம் பிடிப்போம்

வரலாற்றிலே இடம் பிடிப்போம்.


தமிழ்பிரியன்

சாவில் தமிழ் படித்து சாகவேண்டும் என்

சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்

alivetamil@gmail.com

Related Posts Plugin for WordPress, Blogger...

கட்டுரைகள்

Rationality Tamil Society & Politics
கடவுள் மனிதனைப்படைத்தானா? மனிதன் கடவுளைப்படைத்தானா? Who created the God By Alive tamil அழிவை நோக்கிய பாதையில் தமிழ்மொழி பயணிக்கிறது!Tamil is disappearing By Alive tamil மார்க்சியமும் அதன் மெய்யியல் கோட்பாடுகளும் Marxism By Alive tamil
பகுத்தறிவு என்றால் என்ன? What is Rationality By Alive tamil மறைக்கப்பட்ட எல்லாளனின் சமாதி The hidden tomb of Ellalan By Alive tamil பிரடெரிக் எங்கல்ஸின் பார்வையில் பாட்டாளி வர்க்கம் proletariat By Alive tamil
தீ மிதித்தல் அலகு குற்றுதல் அருளா அல்லது அறிவியலா? By Alive tamil மனித வாழ்வியலில் திருக்குறளின் அவசியம் Importance of Thirukural By Alive tamil மாவோவின் வரலாற்று பயணம் History of Mao zedung By Alive tamil
உலகில் முன் தோன்றிய பகுத்தறிவாளன் வள்ளுவன் Valluvar By Alive tamil உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன் Senbaharaman By Alive tamil வேண்டும் விடுதலை காஷ்மீர் மக்கள் Freedom of Kashmir By Alive tamil

 
  •  

    RSS Feed

    facebook

    Twitter

    Youtube

    Indli

    Tamilmanam