Sunday, August 7, 2011

உலகில் முன் தோன்றிய பகுத்தறிவாளன் வள்ளுவன் [Valluvar Alive Tamil Blog]


வள்ளுவரைத் தமிழ்கூறும் உலகில் தோன்றிய முதல் பகுத்தறிவாளர் எனக் கூறலாம். ஏனெனில் எந்தவொரு கருத்தையும், சிந்தனையையும் உள்ளவாறு ஏற்காமல் பகுத்து நோக்கி, என்ன ஏது என்று ஆராய்ந்து உள்ளத் தெளிவு பெற்று ஏற்க வேண்டும் என்பதையே வள்ளுவர் கூறுகிறார்.

பகுத்தறிவு என்பது யாதென வள்ளுவர் பின்வருமாறு வரையறை செய்கிறார்

குறள் #355
அதிகாரம் மெய்யுணர்தல்

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

எந்தப் பொருளானாலும், அது எப்படிக் காட்சி தந்தாலும், அப்பொருளின் வெளித்தோற்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஆராயாமல் அதுபற்றிய உண்மையை ஆழமாக ஆராய்ந்து  உணர்வதுதான் அறிவுடைமையாகும்.

குறள் #423
அதிகாரம் அறிவுடைமை

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

எந்த விடயமாகினாலும் அதை யாரிடத்திலிருந்தோ அல்லது எந்த இடத்திலிருந்தோ கேட்டாலும், கேட்டவாறே கொள்ளாமல்; அவ்விடயத்தின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும். சுருங்கக்கூறினால் எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.

மேற்கூறிய இக்குறள்கள் பகுத்தறிவின் தாற்பரியத்தை விளக்குகின்றன‌. மேலும் பகுத்தறிவின் சிறப்பை வள்ளுவர் பின்வருமாறு கூறுகிறார்.

குறள் #354
அதிகாரம் மெய்யுணர்தல்

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு

உண்மையைக் கண்டறிந்து அல்லது ஆராய்ந்து தெளிவடையாதவர்கள், தமது ஐம்புலன்களையும் அடக்கி எத்தகைய துறவற வாழ்க்கையிலும் வெற்றி கண்டிருந்தாலும் கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

அடுத்த பிறப்பு முற்பிறப்பு என்ற அறியாமையில் இருந்து நீங்கு, என மூடக்கொள்கைகளை எதிர்க்கிறார் வள்ளுவர்.
குறள் #358
அதிகாரம் மெய்யுணர்தல்

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு

அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமை அல்லது பகுத்தறிவாகும் என்கிறார் வள்ளுவர்.
வள்ளுவன் எமக்கு என்றோ பகுத்தறிவுச் சிந்தனைகளை புகுத்திவிட்டான்
எனவே வள்ளுவனின் குறள்களிலும் மெய்ப்பொருள் காணவல்லது பகுத்தறிவு ஆகும்.

Alivetamil blog
http://www.alivetamil.blogspot.com



0 comments:

Post a Comment

Welcome to Alivetamil Blog www.alivetamil.blogspot.com


சாதி மத சகிதியில் இருந்து தமிழனை மனிதனாக வாழவைத்த தந்தை பெரியாரின் பேரனாய், தமிழ் உணர்வோடும் தன்மானத்தோடும் தலை நிமிர்ந்த பண்டாரவன்னியன் வழி வந்த வீரனாய் வாழும் என் தமிழ் உறவுகளுக்கு உற்சாகமாய் தோள் கொடுத்து பகுத்தறிவையும் இன உணர்வையும் ஊட்டும் கலிங்கம் போன்றது இத்தளம். பட்டையைப் பூசி கொட்டையைக் கட்டிப் பகல் வேடம் போட்டுப் பாமரரை ஏமாற்றும் பகற் கொள்ளைக்காரப் பார்ப்பானிற்கு இத்தளம் பாஷணம் போன்றது. யாரையும் புண்படுத்தும் நோக்கம் அடியேனுக்கு கிடையாது சமூகப்புரட்சிகளையும் பகுத்தறிவுப் போதனைகளையும் இளையோர் கற்றுக் காமுற வேண்டும் என்பது அவா.

மததால் சாதியால் இடத்தால் (பிரதேச வாதத்தால்) நாம் பிளவுபட்டு இழந்ததெல்லாம் போதும்.. தமிழன் என்ற ஓர் அணியில் இணைவோம்..எம் முன்னால் உள்ள‌ தடைக்கற்களெல்லாம் படிக்கற்களாகட்டும்.. தரணியை தமிழினம் ஆளட்டும்..

உலகத்தமிழர்களெ ஒன்றுபடுங்கள்!

தோழர்களே வாருங்கள் ஒன்றாக வடம் பிடிப்போம்

வரலாற்றிலே இடம் பிடிப்போம்.


தமிழ்பிரியன்

சாவில் தமிழ் படித்து சாகவேண்டும் என்

சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்

alivetamil@gmail.com

Related Posts Plugin for WordPress, Blogger...

கட்டுரைகள்

Rationality Tamil Society & Politics
கடவுள் மனிதனைப்படைத்தானா? மனிதன் கடவுளைப்படைத்தானா? Who created the God By Alive tamil அழிவை நோக்கிய பாதையில் தமிழ்மொழி பயணிக்கிறது!Tamil is disappearing By Alive tamil மார்க்சியமும் அதன் மெய்யியல் கோட்பாடுகளும் Marxism By Alive tamil
பகுத்தறிவு என்றால் என்ன? What is Rationality By Alive tamil மறைக்கப்பட்ட எல்லாளனின் சமாதி The hidden tomb of Ellalan By Alive tamil பிரடெரிக் எங்கல்ஸின் பார்வையில் பாட்டாளி வர்க்கம் proletariat By Alive tamil
தீ மிதித்தல் அலகு குற்றுதல் அருளா அல்லது அறிவியலா? By Alive tamil மனித வாழ்வியலில் திருக்குறளின் அவசியம் Importance of Thirukural By Alive tamil மாவோவின் வரலாற்று பயணம் History of Mao zedung By Alive tamil
உலகில் முன் தோன்றிய பகுத்தறிவாளன் வள்ளுவன் Valluvar By Alive tamil உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன் Senbaharaman By Alive tamil வேண்டும் விடுதலை காஷ்மீர் மக்கள் Freedom of Kashmir By Alive tamil

 
  •  

    RSS Feed

    facebook

    Twitter

    Youtube

    Indli

    Tamilmanam