Saturday, August 13, 2011

கொலைக்கு கொலையா தண்டணை என்ன மனிதநேயம்! [Alive Tamil Blog]


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் அண்மையில் நிராகரித்துள்ள நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அறிவு என்கிற பேரறிவாளன், சிறீஹரன் என்கிற முருகன், சாந்தன் ஆகிய மூன்று பேரினுடைய தூக்குத்தண்டணையும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மூவருக்கும் இந்திய உச்ச நீதிமன்றம் 1999 ஆம் ஆண்டில் மரண தண்டனையை உறுதி செய்தது. அதன் பிறகு 2000 ஆம் ஆண்டில் இவர்கள் மூவரும் குடியரசுத் தலைவருக்கு தங்கள் மீது கருணை காட்டி, மரண தண்டனையை குறைக்குமாறு கேட்டு கருணை மனுக்களை அனுப்பி வைத்தனர். இந்தக் கருணை மனுக்களின் மீது 11 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்படி முடிவெடுத்துள்ள குடியரசுத் தலைவர், கருணை மனுக்களை நிராகரித்துள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கிற்கு தடாச்சட்டம் பொருத்தப்பாடு அற்றது என்று உச்சநீதிமன்றம் அறிவித்த பின்னரும், அதே சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை மட்டுமே ஒரே சாட்சியமாகக் கொண்டு இவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. தடா சட்டத்தின் கீழ் நடாத்தப்பட்ட விசாரணைகள், சாட்சியங்கள் என்பன துன்புறுத்தி பெறப்பட்டன. இருபது ஆண்டுகால கடும் சிறைவாழ்வினையும் கொடுத்து தூக்குதண்டனையையும் கொடுக்கிறது அரசு. ஒரு குற்றத்திற்கு இரு தண்டணைகள் போலவே தோன்றுகிறது அரசின் இந்த கால இழுத்தடிப்பு.
ராஜீவ் காந்தியின் கொலையை தூக்கிப்பிடிக்கின்ற தேசப்பற்றாளர்களே! உங்களிடத்திலே மறுக்கப்பட்ட நீதி கிடைக்கப்பெறாவிட்டாலும், மாந்தநேய எண்ணமும் கூடவா துளியளவும் இல்லை?
ஒரு மனிதன் கொலை செய்துவிட்டால் அவனை கொலைசெய்வதா உங்கள் மனிதத்துவம்?
உலகில் 137 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது ஏனென்றால் இது ஒரு சட்டத்தின் அநீதியாகவே கருதப்படுகிறது. கொலை செய்தவனுக்கு தண்டனையாக நீதிமன்றம் அளிக்கும் மரண தண்டனையும் கொலைதானே ஒழிய வேறென்ன? தோழர்களே.

தண்டனையின் நோக்கம் குற்றம் செய்த மனிதனை மாற்றுவதே, மாய்ப்பது அல்ல.
மானுடத்தின் போக்கிற்கும், மனிதாபிமானத்திற்கும் எதிரான மரண தண்டனைக்கு முற்றுப்புள்ளி வைக்க குரல்கொடுங்கள் தோழர்களே.
வாழ்வுரிமையை பறிக்கும் மரண தண்டனை ஒழியட்டும்.
மறுக்கப்பட்ட நீதிக்கான இவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்.

Alivetamil blog






1 comments:

Play Coin Casino Canada | C$1600 Welcome Bonus
Coin Casino is an innovative online 인카지노 casino 온카지노 that has gained an exclusive license from the Malta Gaming Authority (MGA). The casino's unique 🎁 Welcome Bonus: C$1600💲 Games: 1000+🎲 Games: 메리트카지노 1000+🤵 Live Dealers: 250+

Post a Comment

Welcome to Alivetamil Blog www.alivetamil.blogspot.com


சாதி மத சகிதியில் இருந்து தமிழனை மனிதனாக வாழவைத்த தந்தை பெரியாரின் பேரனாய், தமிழ் உணர்வோடும் தன்மானத்தோடும் தலை நிமிர்ந்த பண்டாரவன்னியன் வழி வந்த வீரனாய் வாழும் என் தமிழ் உறவுகளுக்கு உற்சாகமாய் தோள் கொடுத்து பகுத்தறிவையும் இன உணர்வையும் ஊட்டும் கலிங்கம் போன்றது இத்தளம். பட்டையைப் பூசி கொட்டையைக் கட்டிப் பகல் வேடம் போட்டுப் பாமரரை ஏமாற்றும் பகற் கொள்ளைக்காரப் பார்ப்பானிற்கு இத்தளம் பாஷணம் போன்றது. யாரையும் புண்படுத்தும் நோக்கம் அடியேனுக்கு கிடையாது சமூகப்புரட்சிகளையும் பகுத்தறிவுப் போதனைகளையும் இளையோர் கற்றுக் காமுற வேண்டும் என்பது அவா.

மததால் சாதியால் இடத்தால் (பிரதேச வாதத்தால்) நாம் பிளவுபட்டு இழந்ததெல்லாம் போதும்.. தமிழன் என்ற ஓர் அணியில் இணைவோம்..எம் முன்னால் உள்ள‌ தடைக்கற்களெல்லாம் படிக்கற்களாகட்டும்.. தரணியை தமிழினம் ஆளட்டும்..

உலகத்தமிழர்களெ ஒன்றுபடுங்கள்!

தோழர்களே வாருங்கள் ஒன்றாக வடம் பிடிப்போம்

வரலாற்றிலே இடம் பிடிப்போம்.


தமிழ்பிரியன்

சாவில் தமிழ் படித்து சாகவேண்டும் என்

சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்

alivetamil@gmail.com

Related Posts Plugin for WordPress, Blogger...

கட்டுரைகள்

Rationality Tamil Society & Politics
கடவுள் மனிதனைப்படைத்தானா? மனிதன் கடவுளைப்படைத்தானா? Who created the God By Alive tamil அழிவை நோக்கிய பாதையில் தமிழ்மொழி பயணிக்கிறது!Tamil is disappearing By Alive tamil மார்க்சியமும் அதன் மெய்யியல் கோட்பாடுகளும் Marxism By Alive tamil
பகுத்தறிவு என்றால் என்ன? What is Rationality By Alive tamil மறைக்கப்பட்ட எல்லாளனின் சமாதி The hidden tomb of Ellalan By Alive tamil பிரடெரிக் எங்கல்ஸின் பார்வையில் பாட்டாளி வர்க்கம் proletariat By Alive tamil
தீ மிதித்தல் அலகு குற்றுதல் அருளா அல்லது அறிவியலா? By Alive tamil மனித வாழ்வியலில் திருக்குறளின் அவசியம் Importance of Thirukural By Alive tamil மாவோவின் வரலாற்று பயணம் History of Mao zedung By Alive tamil
உலகில் முன் தோன்றிய பகுத்தறிவாளன் வள்ளுவன் Valluvar By Alive tamil உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன் Senbaharaman By Alive tamil வேண்டும் விடுதலை காஷ்மீர் மக்கள் Freedom of Kashmir By Alive tamil

 
  •  

    RSS Feed

    facebook

    Twitter

    Youtube

    Indli

    Tamilmanam